Saturday, June 11, 2011

சீனாவின் டரக்கோட்டா படை வீரர்கள்


சீனாவின் டரக்கோட்டா படை வீரர்கள்



நம் ஊர் அய்யனார் கோயில்களில் சுடு மண்ணால் செய்து வைக்கப்பட்ட போர் வீரர்கள், குதிரைகள், நாய்கள் போன்று சீனாவில் இறந்த அரசர் மற்றும் வீரர்களின் நினைவாக மண்ணால் செய்யப்பட்ட டரக்கோட்டா சிலைகள் 1974ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

லீஷான் மலைக்கு கிழக்கே சியான் ஷான்சி பகுதியில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் தண்ணீருக்காகக் கிணறு தோண்டும் போது இந்த அரிய வரலாற்றுப் பொக்கிஷமான் டரக்கோட்டா படை வீரர்களின் சிலைகளை கண்டுபிடித்தார். இத்தகவலை அறிந்த சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் இவ்விடத்தை அகழ்ந்து தோண்டினர். அதில் மூன்று நீளமான குழிகளில் 1800 டரக்கோட்டா சிலைகளாக படைவீரர்கள், 130 ரதங்கள், 520 குதிரைகள், 150 போர்க்குதிரைகள் போன்றவை வெளி உலகுக்கு தரிந்தது.

இவையாவும் சீனாவின் முதலாவது பேரரசனான குய்ன் ஷி யுவாங்கின் கல்லறைக்கு அருகாமையில் இருந்தது. ஒவ்வொரு சிலையின் உயரமும்
6 அடியிலிருந்து 6.5 அடி உயரம் வரை உள்ளது. இந்த உயரம் யாவும் படைவீரர்களின் தகுதிக்கு ஏற்ப உள்ளது.

படைவீரர்கள், குதிரைகள், ரதங்களைத்தவிர உயர் அதிகாரிகள், கழைக் கூத்தாடிகள்,வலிமை பொருந்திய மனிதர்கள், இசை விற்பன்னர்கள் போன்றவர்களும் உண்டு. அத்துடன் பேரரசரின் உடலைப் புதைத்த இடமும் தோண்டி எடுக்கப்பட்டது.

சீனாவின் வரலாற்று ஆசிரியரான சிமா குய்ன் என்பவர் இந்த மசோலியம் என்று சொல்லக்கூடிய கல்லறையைக் கட்டுவதற்கான கட்டுமானப்பணி கி.மு.246ல் தொடங்கினார். இப்பணியில் சுமார் 7 லட்ச்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இக்கல்றையை கட்டத் தொடங்கும் போது குன் ஷி குவாங்கிற்கு வயது பதின்மூன்று.

கி.மு.209-210ம் ஆண்டில் வாழ்ந்த சீனாவின் முதலாம் பேரரசர் குய்ன் ஷி குவாங்க் இறந்த போது அவருடன் இந்த டரக்கோட்டா படைவீரர்களும் புதைக்கப்பட்டனர். முதலாம் மன்னன் குய்ன் அப்படைக்குத் தலைமை தாங்குவது போலவும் அவரைப் படைவீரர்கள் பின்தொடர்வது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை மன்னர் இறந்துவிட்டாலும் அவருக்குத் தொண்டு செய்வது இந்தப் படை வீரர்களின் கடமையாகும். இவர்களக் குய்ன்ஸ் படைவீரர்கள் என்று அழைக்கிறார்கள்.

இந்த மண் சிலைகள் செய்வதற்கான மூலப்பொருட்கள் லீஷான் மலையிலிருந்து எடுக்கப்பட்டதாகும். அகழ்வாராய்ச்சியின் போது இந்தப் படை வீரர்களுக்கு அருகாமையிலேயே பேரரசரின் கல்லறையும் கண்டுபிடிக்கப்பட்டது.

(ஆர்.மணவாளனின் உலக அதிசயங்கள் அன்றும் இன்றும் என்ற நூலில் இருந்து)


No comments:

Post a Comment