Friday, January 21, 2011

பாலுக்கும் கள்ளுக்கும்


பாலுக்கும் கள்ளுக்கும் 
 
செக்குமேடு. இது ஒரு காலத்தில் பாண்டிச்சேரியில் பலான தொழில் நடக்கும் காந்தபுரா. சோனாகன்ச். கோடம்பாக்கம் போன்றதோர் இடமாகும்.வயது வித்தியாசமின்றி அவ்வழியே போகும் இள வாலிபர்களையும் ஆடவர்களையும் மார்புத் துணியை விலகி கண்ணால் சைகை காட்டி கையைப்பிடித்து பாலியல் சுகத்திற்க்கு கட்டாயமாக கூட்டிவரும் கணிகையர்கள் நிறையபேர் எப்போதும் ஒவ்வொரு குடிசை கதவருகே காத்திருப்பர்.24 மணி நேரமும் ஓய்வு ஒழிச்சல் இல்லாத ஒரு சொர்க்காபுரி.
 
15க்கு 30 அடி நிலப்பரப்பில் ஒவ்வொரு குடிசைகளும் அதனுள்ளே ஏழு அறைகள் மண் சுவரால் தலை வரை தடுப்பு சுவர் நன்றாக சாணிபோட்டு மெழுகி இருக்கும்.
 
     முதல் அறையின் இன்ப ஓசை
 
" என்ன இருந்தாலும் எல்லா விஷயத்திலும் மங்களம் ...மங்களம் தான். இந்த வயசிலேயும் எப்படி கட்டு குலையாம இருக்க மங்களம். இந்தா ஒனக்காக ஆசையா ஒரு பொட்டலம் பி¡¢யாணியும் ஒரு பாட்லு பிராந்தியும் வாங்கியாந்து இருக்கேன் என் ஞாபகார்த்தமா வெசுக்கோ".
 
அடுத்த அறையில் பிணம் போல ஒருத்தி படுத்திருக்க. அவளை அம்மணமாக ஒருவன் கட்டித்தழுவ
 
" யோவ் சீக்கிரம் முடிக்சிட்டு வெளியேறதப் பாரு. நீ கொடுக்குற அஞ்சு ரூபாய்க்கு ஒனக்கு எல்லாத்தையும் அவுத்து போட்டு காட்டுவாங்க. பட்டு.. பட்டுன்னு சட்டைய கழட்டனுமா வேலைய முடிச்சமான்னு இல்ல.சீக்கிரம் எந்திரியா" என்று குரல் கேட்க,
 
     மூன்றாவது அறையில்,
 
" நல்லா மூக்கமுட்ட குடிச்சிட்டு எதுல வெக்கிறதுனே தெரியல. எவ்வளவு பணம் வெச்சிருக்க?.வெளியூரா?"
  
     " ஆமா"     
 
" சரி...சரி.. சீக்கிரம் முடிச்சிட்டு எடத்தை காலி பண்ணு."
 
"எங்க இருக்குன்னு தெரியல. ஓ... "அங்கேயே வாந்தியெடுக்க.
 
"கருமாந்தரம். இங்கேயே எல்லாத்தையும் எடுத்திட்டியாய்யா. ஒரே நாத்தம்மா நாறுது. சனியன சீக்கிரம் கிளம்பு."
 
"ஒன்னுமே செய்யலையே"
 
"செஞ்சது வரைக்கும் போதும் எந்திரி." என்று விரட்டியதும். மெல்ல எழுந்து தள்ளாடி.. தள்ளாடி நடந்து போனான்.
 
ஐந்தாவது அரையில்,
 
"காசில்லாம எதுக்கு வந்த.மூனு மாசத்து பாக்கி அப்படியே இருக்கு. அத குடுக்க துப்பில்ல வெள்ளையும் சொல்லையுமா போட்டுட்டு வந்துட்ட. படுக்கும் போதே யோசிச்சு இருக்கனும்."
 
" த... ந... கண்டிப்பா அடுத்த மாசம் சம்பளம் வாங்கியதும் கொடுத்துடறேன்"
 
'' யோவ்.மொதல்ல கையில இருக்கிற மோதிரத்தை கழட்டு. கடன கொடுத்துட்டு மோதிரத்தை மூட்டுகிட்டு போ'' என்று கஸ்டமர் கையில் இருந்த மோதிரத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கினாள் அந்த அறைக்கு சொந்தக்காரி.மோதிரத்தை பறிக்கொடுத்தவன் அவள் மார்பைத் தொடப் போக,
 
''தச்சே கைய எடு'' சொல்லி சேலையை  சரி  செய்தாள்.
 
ஆறாவது அறையில் ரி 
 
'' முந்தானேத்து வந்து போனதிலேயிருந்து ஒரே எரிச்சலா இருக்கு நோய்... கீய்... ஏதாச்சும் வாங்கிட்டியா? என்று ஒருவன் அவனது பார்ட்னருடன் கேட்க,
 
ஏழாவது அறையிலிருந்து, அந்த ஒட்டு மொத்த குடிசைக்கு சொந்தக்காரி எவனுடனோ படுத்துக்கொண்டே,
 
'' எவண்டாவன். எங்குட்டிகளப் பார்த்து நோய் கீய்ன்னு சொல்றது.நேத்துதான் அவ அவளையும் இழுத்துட்டுப்போய் செக்காப்பு பண்ணிட்டு வந்தேன். நாக்க புடுங்கிடுவேன். ஏண்டி. அந்தாண்ட யாரு.''
 
''நா தாம்மா தனம்.''
 
''ஏய் அவங்கிட்ட பணத்த புடுங்கிட்டு வெளிய அனுப்பு.இவன் குடுக்கற மூனு ரூபாவுக்கு எல்லா கேள்வியும் கேட்டுப்புட்டு பூடுவான்.
 
''யோவ் முடிச்சியா சீக்கிரம் எழுந்திரு, அந்த நாய போய் ஒரு கை பார்க்கணும்.''
 
''கொஞ்சம் தடவிக் கொடேன்.''
 
''நா தடவி ஒனக்கு வரதுக்குள்ள வெடிஞ்சுடும்.இன்னொரு நாளைக்கு வா.இப்போ எழுந்திரு.'' வலுக்கட்டாயமாக அவனை எழுப்பி அனுப்பிவிட்டு.நடையை கட்டினாள் மாமி.
 
''எங்கடி அந்த கம்மின்னாட்டி''
 
''நீ போட்ட சத்தத்தில ஓடியே போயிட்டான்''
 
''சரி ... சரி... இந்த மாதிரி கழிசாடைங்ககிட்ட எவளும் படுக்காதீங்கடி'' சொல்லிவிட்டு கஸ்டமா¢ன் அழுக்கை கழுவுவதற்கு தோட்டப்பக்கம் போனாள்.
 
தென்னந்தோப்பு. பௌர்ணமி நிலவொளியில் அழுதுகொண்டிருந்த கை குழந்தையுடன் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள்.
 
''யாரடியம்மா கொழந்தைய இப்படி வீல்ன்னு அழுவவிட்டு நிக்கறது''
''நா தாம்மா செண்பகம்.''
 
''என்னடியம்மா இந்த நேரத்துல கொழந்தைய அழவெச்சுகிட்டு இருக்கே. பாலு.. கீலு.. கொடுக்கக்கூடாது.''
 
''எம்பால குடிச்சா இதுக்கு வயித்த வலிக்குது. எங்கிட்ட பாலில்லம்மா.இந்த பச்சப்புள்ள பாலுக்கும் அந்த மனுஷன் கள்ளுக்கும் நான் எவங்கிட்டயாவது படுத்துதாம்மா ஆகனும்.இல்லேன்னா என்னை வெட்டிப்போட்டுடுவான் அந்த மனுஷன்"
 
''ஏண்டி சிறுக்கி. இந்த நாய்க்கிட்ட கஷ்ட்டப்படணும். எத்தனை கழுதை இங்க வருது.அதுல எதையாவது ஒன்ன புடிச்சிகிட்டு எங்கியாவது ஒடிட வேண்டியதுதானே."
 
'' நா அந்த மனுஷங்கிட்ட  சொல்லாம எங்கியாவது ஓடிடலாம்ன்னு நெனச்சு, பஸ் ஸ்டாண்டுக்கு போனேன்.என்னை தேடி கண்டுபிடிச்சு வீட்டுக்கு கூடியாந்து சாத்தோ சாத்துன்னு சாத்திட்டான்.அத்தோடில்லம்மா கை காலு முதுகு எங்கபார்த்தாலும் சூடு போட்டுட்டான்.'' என்று அந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் புடவையை அவிழ்த்து காண்பிக்க பதறிப்போய்,''அடி பாவி முண்ட .இவ்ளோத்தையும் எப்படித்தான் தாங்கிக்கிட்டு இருக்கியோ.இப்பேர்ப்பட்ட கம்மினாட்டிய சோத்துல விஷம் வெச்சு கொன்னுட வேண்டியதுதானே.''
    
'' அந்த மாதிரி ¨தைரியம் இருந்தா நான் ஏம்மா இங்க வரப் போறேன்.''
  
'' அது சரி.ஒன் ஆத்தா அப்பன் வீட்டுக்கு போயிட வேண்டியதுதானே.''
 
'' இப்படி கெட்டு சீரழிஞ்சு எந்த மொகத்தோட நான் அங்கப் போவேன். மழை இல்லாம வெவசாயம் போச்சு. பொட்ட புள்ளைய வீட்ல வெச்சுக்கறது நல்லது இல்லன்னு,ரெண்டு காணி நெலத்தை வித்து கல்யாணம் பண்ணி வெச்சாங்க.  நல்ல மாப்பிள்ள. ஆலையில வேலை செய்யறானேன்னு கொடுத்தாங்க. இங்க வந்து பார்த்தப்புரம்தான் தெரிஞ்சுது குடிச்சுட்டு வேலைக்கு போகாம ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கான்னு. கொஞ்ச நாளானதும் என் ஆத்தா அப்பன் இங்க வந்து என்னை பார்க்கக்கூடாது.நானும் அங்க போகக்கூடாதுன்னு சொல்லி என் வாழ்க்கைய சீரழிச்சுட்டான்.தெனம் தெனம் அந்த மனுஷங்கிட்ட செத்து பொழைக்கிறேம்மா.''
 
'' இப்போ அந்த கம்மினாட்டி எங்க?"    
 
''ரெண்டு குட்டிகள இழுத்துக்கிட்டு தலைவரு வூட்டுக்கு போயிருக்கான். அவன் வர்ரதுக்குள்ள நான் அவன் குடிக்கிறதுக்கு முப்பது ரூபா வெச்சுடனும்.இல்லேன்னா என்னை வெட்டிப்போட்டுடுவான்.''
  
''போலீஸ்ல பிராது கொடுத்தாலும் எல்லாம் அவன் ஆளாத்தான் இருப்பானுங்க. ஏண்டியம்மா ஒரு நாளைக்கு எத்தனை தடவமா போவே? நீயே சீக்காலி மாதிரி இருக்கே. ஒன் கொழந்தையோ தேவாங்கு மாதிரி இருக்கு. சரி.. சரி..  நீ ஒன்னும் எவங்கிட்டேயும் படுக்கத்தேவையில்லை. இந்தா ஒன் கொழந்தைக்கு பாலுக்கும் அந்த தூம குடிக்கறதுக்கு கள்ளுக்கும் வெச்சுக்கு.'' சொல்லி முப்பது ரூபாயை கொடுத்தாள் அந்த மகராசி. அழுத கொழந்தையை தோளில் தூக்கிப்போட்டுக்கிட்டு ஒரு கையால் மூக்கை புடவையால் துடைத்துக்கொண்டு கிளம்பினாள் செண்பகம்.
 
(சூரியோதயம் மாத இதழில் ஆர்.மணவாளன் எழுதி வெளிவந்த சிறுகதை)
 
 

No comments:

Post a Comment