Saturday, June 11, 2011

கபிலர் குன்று


கபிலர் குன்று



மன்னன் மலையமான் வம்சத்தினர் சங்க காலத்தில் திருக்கோயிலூர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பரப்பை ஆண்டு வந்தனர்.

இக்காலக்கட்டத்தில் வாழ்ந்த சங்கப் புலவர் கபிலர் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் நெருங்கிய நண்பராவார். முடியுடை மூவேந்தர்கள் பாரியையும் அவன் ஆண்ட பரம்பு நாட்டையும் முற்றுகையிட்டு அழித்துவிட பாரி வள்ளல் தன் இரு மகள்கைளையும் கபிலரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு இறந்துவிட்டான். 

  
அதன் பிறகு கபிலர் தனது நண்பரின் மகள்களைத் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் நீத்த இடம்தான் திருக்கோயிலூர் பெண்ணையாற்றின் நடுவே உள்ள சிறு குன்றாகும். இக்குன்றே கபிலர் குன்று என இப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

தற்போது அக்குன்றின் மேல் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. இக்குன்றின் உச்சியை அடைய ஒருவர் மட்டும் செல்லக்கூடிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இச் செய்தியை திருக்கோவிலூர் வீரட்டாணத்தில் உள்ள இராஜராஜன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.

(ஆர்.மணவாளனின் உலக அதிசயங்கள் அன்றும் இன்றும் என்ற நூலில் இருந்து)


1 comment: