Tuesday, March 1, 2011

அரிக்கன் மேடு ஒரு வணிகத் தளம்





                 அரிக்கன் மேடு ஒரு வணிகத் தளம்

புதுச்சேரியிலிருந்து கடற்கரை வழியாக தெற்கே சுமார் 3கி.மீ. தொலைவில் உள்ளது வீராம்பட்டினம் என்னும் சிற்றுர். அவ்வூரிலிருந்து மேற்கில் காக்காயத்தோப்பு என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து வடமேற்கில் சிறு காட்டுப்பகுதி போலக் காணப்படுவதுதான் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அரிகன்மேடு.இப்பகுதியை ஒட்டியே செஞ்சியாறு கடலில் கலக்கின்றது. இப்பகுதி ஒரு காலத்தில் கிரேக்கர்களும் ரோமானியர்களும் த்ங்கள் தங்கள் பொருள்களை வியாபாரம் செய்து பிரசித்திப் பெற்ற வணிகச் சந்தையாக அமைந்திருந்தது என்றால் ஆச்சரியமாக உள்ளதா?  ஆச்சரியப்படத்தேவை இல்லை. அவர்கள் இங்கு தங்களுடைய வணிகத் தளங்களையைமைத்து நம்முடன் வர்த்த்கம் செய்தன்ர். அதுமட்டுமல்ல ந்மது நாகரிகமும் அவர்களுக்குச் ச்மமாகத்தான் இருந்து வந்துள்ளது.


கி.பி.60ல் வாழ்ந்த பெரிபுளூஸ் என்ற யவன ஆசிரியர் தனது கடற் பயணக்குறிப்பில் சோழ மண்டலத்தில் கப்பல் வந்து தங்குவதற்கு ஏற்ற இடமாக கமரா ( காவிரிபூம்பட்டினம்), பொதுக்கே (புதுச்சேரி), சோபட்டினம் (மரக்காணம்) ஆகிய துறைமுகங்கள் இருந்து வந்தன என்றும் இதில் பூம்புகாரும் புதுச்சேரியும் சரிசமமாக்க் கடற் வாணிகத் தளமாக விளங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்துறைமுகத்தை கி.பி.1700இல் தெபேர் (De Fer)  வெளியிட்ட தேசப்படத்தில் காணலாம். இப்பகுதியில் அடிக்கடி புதுச்சேரி பிரெஞ்சுக் கல்லூரி பேராசிரியர் ழுவோ டுய்ப்ரேய் அவர்கள் கடற்கரை ஓரமாக உலாவுவது வழக்கம். அப்படி அப்பகுதிக்குச் செல்லும் போது சிறுவர்கள் அவரிடம் அன்பாகத் தந்த சிறு சிறு வண்ண மணிகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அதில் ஒன்று அகஸ்ட்டஸ் மன்னனின் தலை பொறிக்கப்பட்ட மணியாகும். இதுவே இவருக்கு இப்பகுதியை அகழ்ந்து பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டியது. உடனே இது சம்பந்தமாக அப்போதைய பெத்தி செமினேர் கல்லூரியில் பணியாற்றிய பாதிரியார் லெபொஷோவுடன் கலந்து பேசி ஆராய்ச்சியில் இருவரும் ஈடுபட்டு வந்தார்கள்.


அதன் பிறகு 1937ஆம் ஆண்டு இந்திய அகழ்வாராய்ச்சித்துறை முதல்வர் மார்ட்டி மேர் வீலர் தலைமையின் கீழ் ஏ.கே.கோஷ் மற்றும் கிருட்டின தேவர் ஆகியோர் இங்கு வந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய ஜாடி, சில்லுகள் கண்ணாடி விளக்குகள், புஷ்பராகம், சிவப்புமணி, படிகம், முத்துக்கள், கோமேதகம், திராட்சை மது ஜாடிகளின் உடைந்த ஓடுகள் மற்றும் முதலாம் நூற்றாண்டு இத்தாலி நாட்டு பளபளக்கும் சிவப்பு ஜாடிகளின் ஓடுகள் கிடைக்கப் பெற்றன. இவையாவும் கிரேக்க ரோமானியர்களின் வாணிகத் தளங்கள் இங்கு தழைத்தோங்கியதற்க்கான ஆதாரப்பூர்வ அத்தாட்சியாகும். அதுமட்டுமல்ல சங்கால் செய்யப்பட்ட வளையங்கள், மிளகு, பட்டை தீட்டிய கற்கள் மற்றும் சாயம்தோய்ந்த மெல்லிய துணிகள் இங்கிருந்து ரோமிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அதற்குப் பதிலாக அங்கிருந்து திராட்சை மது,செப்பு, தங்கக் காசுகள் போன்றவை இறக்குமதியும் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல துணிகளுக்குச்சாயம் தோய்க்க இங்கு சாயப்பட்டறைகள் பல இருந்ததற்க்கான சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அ¡¢க்கன்மேடு பிரசித்திப் பெற்ற வணிகத்தளமாக விளங்கியதால் கிழக்கு ஆசிய நாடுகளான இந்து சீனா (இந்தோனேஷிய) ஜாவா, சுமத்திரா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் நடைபெற்றது. அத்துடன் சமணர்களும், புத்தகுருமார்களும் தங்கள் மதக் கொள்கைகளை பரப்பி வந்ததற்கான ஆதாரங்களும் இங்குள்ளன. பேராசிரியர் துய் ப்ரேய் தனது ஆராய்ச்சியின் போது வீராம்பட்டினத்தின் எல்லைப் பகுதியான காக்காயந்தோப்பு பகுதியில் புத்தர் சிலை ஒன்றைக் கண்டெடுத்தார். இது அக்காலத்தில் புத்த மதத்தினர் நாகப்பட்டினத்தில் சீனக் கோயில் கட்டி வழிப்பட்டது போல் இங்கும் புத்தர் கோயில் கட்டி இந்து சீன புத்தகுருமார்கள் வழிபட்டனர் என்பதற்கு உறுதியான ஆதாரமாகும். தற்போது அப்பகுதி மக்கள் வழிபட்டுவரும் விருமர் சிலை இக்கோயில் சிலையேயாகும். புத்தருக்கு இன்னொரு பெயர் சாக்கியான் என்பதாகும். தோப்பு சூழ்ந்துள்ள இந்தப் புத்தர் கோயில் சாக்கியன் தோப்பு ஆகி நாளடைவில் சாக்கியான் தோப்பு காக்காயந்தோப்பாகியது என்பது வரலாறு.



இதே கருத்தை லெ ழாந்தீய் (Le Gentil 1769 இல் தன் பயண நூலில் குறிப்பிட்டுள்ளார். தற்போது அ¡¢க்கன் மேட்டில் பாழடைந்த ஓர் கட்டிடம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. இது இடைக்காலத்தில் அதாவது வெள்ளையர்கள் நம்மை ஆண்டு வந்த சமயத்தில் மதத் தத்துவக் கழகம் என்ற ஒன்றை 1770-ஆம் ஆண்டு அவர்கள் நிறுவியிருந்தனர். இங்கே தான் தவத்திரு அத்ரான் பாதிரியார் என்ற பிஞ் ஞொ தெ பெயேன் (Pigneu de Behaine) என்பவர் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பொட்டல் காடாகக் காட்சியளிக்கும் இந்த வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இடத்தை அகழ்வாராய்ச்சியினர் மீண்டும் தீவிர ஆராய்ச்சி நடத்தினால் மறைந்து போன பண்டைய வரலாற்று உண்மைகள் வெளிவரலாம்.

ஆர்.மணவாளன் எழுதிய உலக அதிசாயங்கள் அன்றும் இன்றும் என்ற நூலில் இருந்து ...