Saturday, January 22, 2011

சாலையோரப் பூக்கள்



சிறுகதை-3  
சாலையோரப் பூக்கள்
                                   - ஆர். மணவாளன் 

ரோட்டு ஓரம் மரவாடி மதிற்சுவரை ஒட்டிய இடத்தில் போஸ்டரால் செய்யப்பட்ட ஒரு சிறிய கூடாரத்தில் அவர்களது அன்றாட வாழ்க்கை. அதாவது பிறப்பு இறப்பு தாம்பத்யம் சாப்பாடு விருந்தோம்பல் எல்லாமே அந்த ரோட்டு ஓரத்தில்தான்.
 
தினந்தோறும் காலையில் 6 மணிக்கு எழுந்திருச்சு பானையில் உள்ள பழந்தண்ணீரில் முகம் அலம்பிவிட்டு. த்லைமேல் இருக்கும் பூவரச மரக்கிளையின் நுனியியை ஒடித்து பல் தேய்க்க குச்சியை வாயில் வைத்து ரிக்ஷ¡வை மிதித்து செல்வான். பஸ் ஸ்டாண்ட் போகிறவழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் 'ரெண்டுக்கு' போய்விட்டு ஏதெனும் குட்டையிலோ அல்லது முனிசிப்பாலிட்டி குழாயிலோ குண்டியை கழுவினாலும் கழுவுவான் அல்லது வெஸ்டெர்ன் ஸ்டைலில் ட்ஷ்யூ பேப்பரில் துடைத்துப் போடுவது போல் குப்பையிலிருந்து காகிதத்தை எடுத்து துடைத்துப் போட்டுவிட்டு, வண்டியை மிதித்தால் இரவு பத்து அல்லது பதினோரு மணிக்கு வீடு திரும்புவான்.

அவனுடைய சம்பாத்தியம் என்னவோ ஒரு நாளைக்கு கெஸட்டர் ஆபிசருக்கு சமமாத்தான் இருக்கும். அவ்வளவும் அவனது கடின உழைப்பு. ஆனால் வண்டி வாடகை மற்றும் ரிப்பேர் செலவில் தினந்தோறும் கால்பங்கு போய்விடும். மீதம் உள்ள முக்கால் பங்கு மூனாம் நெம்பர் கள்ளுக்கடைக்குப் போய்விட்டு பொண்டாட்டிக்கும் ஆத்தாவுக்கும் சேர்த்து ரெண்டு பாட்டில் வாங்கிட்டு வருவான். கையில் அவனிடதில் தினந்தோறும் அஞ்சோ பத்தோ கொடுப்பான். இதுதான் அவனுடைய வாடிகையான செயல்.

அன்றைக்கு அவனுடைய அவள். அவனுக்காக ரோட்டு ஓரத்திலே குளித்துவிட்டு சீவி சிங்காரிச்சு தலை நிறைய மல்லிகை மணக்க, காரமீன் குழம்பு அடுப்பில் குதிக்க,தன்னுடைய கூடாரதிற்க்கும் அடுப்புக்கும் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள்.

கணெஷ் பீடியை வாயில் வைத்து புகையைக் கக்கிக்கொண்டு கையில் இரண்டு பாட்டில் ஆங்கிலத் தண்ணியை எடுத்து வந்தவன், ஒன்றை தாயாரிடமும் மற்றொன்றைத் தாரத்திடமும் கொடுத்தான். ஆத்தா அதை எடுத்துக்கொண்டு எதிரேயுள்ள திண்ணைக்கு ஓடிவிட்டாள்.

''என்னா, இன்னிக்கு வெள்ளோட்டமா.''

அட இன்னிக்கு வெளியூர் பார்ட்டி ரெண்டு ஏறிடிச்சு. அதுங்கள இழுத்துக்கிட்டுப்போய் தள்ளிட்டு வந்தேன் அதான்."

'' த, நீ ஒண்ணும் தள்ளிட்டுப் போவலியே''

''அடச்சீ உம்புத்தி எங்க போவும்''

பேசிக்கிட்டு இருக்கும்போதே. கான்ஸ்டபிள் ரெண்டுபேர் லத்தியால் ஒரு தட்டு கூடாரத்தின் மீது தட்டினர்.

''யார்ராது''

'' எவண்டா''

''ஹே. யாருன்னு நெச்சு டா போட்ற. வண்டிக்கார நாயே.''

'' மிஸே.யாருன்னு தெரியாம சொல்லிட்டேன். மன்னிச்சுடுங்க''

'' ம்...ம்.. அதோ தனியா நிக்குதே அந்த பார்ட்டிய வண்டியில ஏத்திட்டு போயி அய்யாக்கிட்ட கொண்டுவிடு. இன்னிக்கு அய்யா நைட் டூட்டி.  இந்தாடா இந்த பிரியாணி பார்சல் பாட்டிலயும் கொண்டுபோய் கொடு.''

''சரிங்க''

''யாருன்னு கேட்டா 502, 503 ரெண்டு பேரும் சேர்ந்து அனுப்பி வெச்சாங்கன்னு சொல்லு'' என்றார் 503.

''சரிங்க''

''எங்கடா. அங்கப் போறே.''

'' அவகிட்ட சொல்லிட்டு வர்ரேங்க''

''ம்...ம்.. சீக்கிரம் வாடா''

இருவரும் ஓரத்தில் ஒதுங்கியிருந்த பார்ட்டியிடம் நகர்ந்தார்கள்''

'' தா... போலிசுக்காரங்க எவளையோ தள்ளிட்டு வந்திருக்காங்க. அத எஸ்.ஐ.கிட்ட வரச்சொன்னாங்க. த் ரெண்டு எட்ல போயிட்டு வண்டுடறன்.''

'' த் சீக்கிரமா வாய்யா, காரமீனுக் கொழம்பு சுடச்சுட சாப்பிட்டத்தான் நல்லாயிருக்கும்.''

''நீ கொழம்ப எறக்கி வெக்கறதுக்குள்ள வந்துடறன்.'' சொல்லிவிட்டு ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு பார்ட்டியிடம் நகர்ந்தான்.

''ம்.. ஏறும்மா..'' திரும்பி பார்த்துவிட்டு

''வரட்டுக மிஸே.''

''ம்...ம்.... பத்திரம்மா பார்ட்டிய சேர்த்துட்டு வாடா.''  

'' தேவ்டியா பசங்க... பெரியவன் சின்னவங்க மாரியாதையே கெடையாது. இவனுங்களுக்கு வண்டிக்காரனுங்கன்னா அவ்வளவு எலக்காரமா போயிட்டானுங்க. பொறம்போக்கு நாய்ங்க காக்கி சட்டையை போட்டுட்டா பெரிய மயிருன்னு நெனப்பு.''

முனகிக்கொண்டே பார்ட்டியை வண்டியில் ஏற்றிக்கொண்டு சவாரி செய்தான்.

கான்ஸ்டபிள் இருவரும் இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிட்ட சரக்கின் 'கிக்'கினால் அப்படியே ஜீப்பின் மீது சாய்ந்தனர்.

''யோவ்....புல் பாட்டில் சோடா இல்லாம அடிச்சதனால வயிறு கப கபன்னு எரியுதுய்யா.''

''அட எனக்குந்தாய்யா. இந்த ராத்திரியில கடை வேறு இல்ல.''

'' அட நீ வேறு ஒன்னுய்யா. அங்கப்பாரு குட்டி வைக்கிற மீன் கொழம்பு அப்படியே மூக்க கில்லுது.''

'' நம்ப வீட்லையுந்த்தான் இருக்காளுவல. எவளுக்காவது இது மாதிரி கொழம்பு வைக்க தெரியுத?''

''யோவ் அவன் போய் வர்ரதுக்கு எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆவும். வா.. போவலாம்.

''த்... பொண்ணு, இன்னா கொழம்பு வெச்சிருக்க''

''கார மீனு கொழம்புங்க''

503 சட்டியை திறந்து பார்த்துவிட்டு, சட்டி நெறையா இருக்கு. இவ்வளத்தையுமா சாப்டுவீங்க.''

''இது ரெண்டு நாளைக்குங்க''

''சரி.. .. சரி .. கரமீனுக் கொழம்பு மூக்கத் தொலைக்குது. எலைய எடுத்துட்டு, சாதம் கொழம்பு எல்லாத்தையும் ஜீப்பாண்ட கொண்டுட்டு வா..''

''போயும்.... போயும்... எங்க சாப்பாட்டியா?''

''அட. நீ வேற பாப்பா , எங்களுக்கு ஜாதில்ல, மதமில்ல எல்லாம் சம்மதம்.. ம்...ம்.. சீக்கிரம் கொதிக்கிற கொழம்பையும் அந்த குண்டாஞ் சோத்தையும் எலையையும் எடுத்துட்டு வந்து சேரு'' 503 சொல்லிவிட்டு செல்ல. ஆசையா ஆம்படையனுக்கு வைத்த குழம்பையும் சோத்தையும் வருத்தத்துடன் தூக்கிக் கொண்டு ஜீப்பை நோக்கிப்புறப்பட்டாள்.

பின்புரம் உள்ள ஜீப்பில் அவர்கள் இருவரும் உட்கார்ந்திருக்க. அவள் இலையை விரித்து பரிமாற, இருவரும் மூக்குப்பிடிக்க விளாசிவிட்டனர். குண்டாஞ்ச்சோறும் குழ்ம்பும் சட்டியும் காலி.

''யோவ். எம் பொண்டாட்டிக்கூட இது மாதி¡¢ சாப்பாடு போட்டதில்ல. அவ்வளவு பிரமாதய்யா.''

''எனக்கு சோறு சாப்பிட்டதுகூட திருப்தியில்ல. என் வூட்டுக்காரி  அவ ஆத்தவூட்டுக்குப் போயி அஞ்சு நாளாச்சு. இந்தக் குட்டி பார்க்கற்துக்கு மழு மழுப்பாத்தான் இருக்கா. நீ என்னா செய்யற அவ வூட்டுக்காரன் வரானான்னு பாரு நான் முடிச்சுட்டு  வண்டதும், நீ... போ...'' 503 கிள்ம்ப, 502,''அடியே சோறு என்னம்மோ நல்லத்தான் இருந்தது. கொஞ்சம் இப்படி வந்து படுடி..'' என்று கையைப் பிடித்து இழுக்க,

''வாணாங்க.''

''என்னடி வேணாங்கற, நீ என்னமோ உத்தமி மாதிரியும். நான் என்னமோ உத்தம புருஷன் மாதிரியும். ரெண்டு வருஷத்துக்கு முன்னால் பள்ள்த்தில தொழில் பண்ணிட்டு இப்போ என்ன்மோ பத்தினி வேஷம் போடற.

''நான் இப்போ தாலி கட்டன் பொண்டாட்டிங்க''

''இன்னாடி பெரியதாலி. த பாரு இது மாதிரி  பிகு பண்ண போலிசுக்காரன் புத்திய காட்டிடுவோம். ம்.. சீக்கிரம் வா அடுத்த ஆளு வேற் காத்திருக்கான்'' கையைப் பிடித்து இழுத்து கட்டி அணைக்கிறார்.

ஐந்து நிமிடம் கழித்து பட்டனைப் போட்டுக் கொண்டு வாயில் பில்டர் சிகரெட்டை ஊதிகொண்டு 502 வெளியே வந்து 503க்கு சிக்னல் கொடுத்தார். இப்போது 503 வேனின் உள்ளே குலுங்க ஐந்து நிமிட இடைவெளிக்குப்பின் நின்றது.

ஒரு மணி நேரம் கழித்து வண்டிக்காரன் ரிக்ஷாவை ஓரமாக விட்டுவிட்டு சிறிய கூடாரத்திற்க்குள் நுழைந்தான். குண்டான் காலி, சட்டி காலி, த்லைவிரி  கோலமாக சாக்கில் முகத்தைப் புதைத்துக்கொண்டிருந்தாள். மூன்றுமாத குழந்தை மூத்திரத்தில் நீச்சலடித்துக் கொண்டிருக்க மெல்ல அவளருகில் சென்று,

' த என்னடி நடந்தது.''

'அந்த கம்மின்னாட்டி பசங்க சோறு கொழம்பு எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டு என்னையும்... இதுக்கு நா சம்மதிக்கலன்னா இந்த கூடாரத்தை நாளைக்கு பிச்சு போட்டுட்டுவோம்ன்னு சொன்னான்ங்க. உன்னையும் திருட்டு கேஸ்ல்ல புக் பண்ணி உள்ள்த் த்ள்ளிடுவோம்ன்னு மிரட்டினாங்க.''

'' இங்க வெச்ச பாட்லு எங்கடி?''

''அதையும் அந்த பொற்ம்போக்குங்க எடுத்துட்டு போய்யிட்டனுங்க. இடுகுகுதான் நா தலப்பாட அடிச்சுக்கிட்டேன். சம்பாதிக்கறதுல கொஞ்சம் நெருக்கி எங்கியாவது பொறம்போக்கில ஒரு குடிசை போட்டுக்க்லாம்ன்னு சொன்னேன். நீ என் பேச்சை கேட்டியா? இல்ல உன் ஆத்தா பாவி முண்டை கேட்டாளா? சம்பாதிக்கிறத எல்லாத்தையும் கள்ளுக்கடையில வெச்சுடற. அவளுக்கு ஒரு பாட்ல கொண்டாந்து கொடுத்துடறே. இப்போ ரோட்டுல போற நாயில்லாம் என்ன ருசி பார்த்துட்டு போவுது.''

''சரி ... சரி .. விடுடி'' என்று சொல்லிவிட்டு, உதட்டின் ஓரத்தில் ஒரு பீடியை பற்ற வைத்துக் கொண்டு வண்டியில் அமர்ந்து வானத்தை நோக்கி சிந்தனையில் ஆழ்ந்தான் நேரம் தெரியாமல். தேம்பித் தேம்பி அழுதுகொண்டே, அழுத பிள்ளைக்கு ஜாக்கெட்டை நீக்கி பால் கொடுக்கத் தயாரானாள் அவள்.

 

No comments:

Post a Comment