Saturday, April 23, 2011

மூழ்கிப்போன இலேமூ ரியா






மூழ்கிப்போன லெமூரியா


தென்குமரியைச் சுற்றியள்ள இந்துமாக் கடல் ஒரு காலத்தில் பெரும் நிலப்பரப்பாக இருந்தது என்றால் ஆச்சரியமாக உள்ளதா? இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. அத்தான் நிஜம்.

இந்த மாபெரும் நிலப்பரப்பு தென் அமரிக்காவிலிருந்து ஆஸ்திரியா வரை பரவியிருந்தது. இப்பகுதி திராவிடர்களின் பூர்வீகம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த மாபெரும் நிலப்பரப்பே இலெமூரியா கண்டமாகும். சுமார் 18 கோடி வருடங்களுக்கு முன் இப்பகுதிகள் அடர்ந்த காடுகளாக விளங்கின.

வரலாற்று ஆய்வாளர்களான எர்னஸ்ட் ஹெக்கல், எட்வர்ட் சூயஸ்,ரிச்சர்ட் லீக்கி மற்றும் வால்ட்டர் ராலே ஆகியோர் இப்படிக் கூறுகின்றனர்:

முற்காலத்தில் இந்துமா சமுத்திரம் ஒரு பெரும் கண்டமாக இருந்தது. பின்னர் அது கடல்கோளினால் மூழ்கி இருக்க வேண்டும். அந்தக் கண்டமே இலெமூரியா கோண்டுவானாவாகும்.

இதே கருத்தை சங்கத் தமிழ்ப் புலவர்களும், தமிழ் ஆராய்ச்சியாளர்களான பி.டி.சீனிவாச அய்யங்காரும் உறுதிபட தெரிவித்துள்ளனர்:

முற்காலக் குமா¢க்கண்டம் (இலெமூரியா) இன்றைய கன்னியாகுமா¢க்குத் தெற்கிலும் கிழக்கிலும் பெரும் நிலப்பகுதியாகப் பரந்து விரிந்து கிடந்ததென்றும்: அப்பகுதியில்தான் மனித இனம் தோன்றியது என்றும் உறுதிப்படுத்தப்படுகிறது. இது போன்ற பல ஆதாரங்களோடு இலெமூரியாகண்டம் தென் ஆப்ரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமரிக்கா வரை நீண்டு இருந்தது என்பது புலனாகிறது.

கி.மு.20,000 ஆண்டுகளுக்கு முன் ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்தின் முன்னோடியாக வாழ்ந்த இப்பகுதி மக்கள் திராவிடர் என்றழைக்கப்பட்டனர்.

மறைந்து போன இலெமூரியா மூன்று பிரிவுகளைக் கொண்டது. தென் இந்தியாவின் மேற்குப்பகுதியில் பெரும் நிலப்பரப்பும் மலைத் தொடரும் ஆப்பிரிக்காவை தொட்டிருந்தது. தற்போது எஞ்சியிருப்பது மடகாஸ்கர் மட்டுமே. இந்த மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்துதான் ப·றுளி நதி, குமரி நதி என்ற இரண்டு நதிகள் ஆஸ்திரேலியா கடற்பகுதி வரை நீண்டுச் சென்றன.

இதற்குச் சான்றாகப் புறநானூற்றில் (67) குமரியைப்பற்றி ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. ப·றுளி ஆற்றைப்பற்றியும் புறநானூறு (9) சொல்லப்படுகிறது. 

பாண்டியப் பேரரசு தெற்கே உள்ள இலங்கையையும் தாண்டிப் பல மைல்கள் வரை வி¡¢வடைந்திருந்தது. இந்தப் பேரரசுக்கு உட்பட்டு பெருவளி நாடு மற்றும் ஒளி நாடு என்ற இருநாடுகள் இருந்ததாகத் தமிழ் வரலாற்றுர்; செய்திகள் கூறுகின்றன.

இதற்குச் சான்று. இலங்கை நூலான இராஜ வழி என்ற நூல் தொகுப்பில் கி.மு.300-ஐ ஒட்டி ஏற்பட்ட ஒரு கடல் கோளில் இலங்கை செலானியா நாட்டில் ஒரு லட்சம் பட்டணங்களும், 970 மீனவக் கிராமங்களும், 400 முத்துக்குளிக்கும் (துறை) ஊர்களும் ஏற்கனவே இருந்து அவை அழிந்ததாகக் கூறுகின்றது.

தென் இந்தியாவின் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ்,இந்தொனேஷியா, கம்போடியா,சுமத்ரா, ஜாவா போன்ற நாடுகள் இலெமூரியாவுக்கு உட்பட்டிருந்தது. பாண்டியப் பேரரசின் காலத்தில் தொடங்கப்பட்ட முதல் சங்கம் இடைச்சங்கம் இக்காலக் கட்டத்தில்தான் என ஆய்வாளர்கள் தரிவிக்கின்றனர். இதற்குச்சான்று இறையனார், அடியார்க்கு நல்லார் போன்ற உரை ஆசிரியர்கள் குமா¢க்கண்டத்திலிருந்த நாடுகள் பற்றியும் தமிழ்ச் சங்கம் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். (சிலப்பதிகாரம் 8-2-11-18-20)

இளம்பூரணாரும் க்டல்கோளைப்பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ச்சங்கங்கள் தோன்றிய பண்டையப் பாண்டிய பேரரசு எங்கே? ஆஸ்திரேலியா முதல் ஆப்பி¡¢க்கா வரை நீண்டிருந்த மாபெரும் நிலப்பரப்பு எங்கே?ஆஸ்திரேலியா வரை பாய்ந்து சென்ற் ப்·றுளி நதி மற்றும் குமரி நதி எங்கே?இதற்குப் பதில் அடுத்தடுத்ததாக நிகழ்ந்த கடல்கோளேயாகும்

முதல் கடல்கோளின் போது இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் இணைத்திருந்த நிலப்பரப்பு முற்றிலுமாக மூழ்கிவிட்டது. இதனை அலெக்சாண்டர் கோந்ரவதோவ் என்ற ஆய்வாளர் கூறியது போல இதற்குமுன் தென் அமரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்றவை ஒன்றாக இருந்தன.

இரண்டாவது கடல் கோள் நிகழ்ந்த போது கண்ட நகர்வு ஏற்பட்டு தென் இந்தியாவின் பெரும் பகுதி மூழ்கிப் போனது. இதற்குச்சான்று,கடலின் போ¢ரைச்சலில் மலையே அசந்தது என்கிறது குறுந்தொகை (52).

மூன்றாவது கடல்கோளின் போது தென்கடல் தீவுகள் தென்பாலி நாடு ஆகியவை மூழ்கிப்போயின. இதில் எஞ்சியுள்ள நிலப்பரப்பு தற்போது சிறு சிறு தீவுகளக இருக்கின்றன. அதில் இலங்கையும் ஒன்றாகும்.

பாண்டியனின் பெருநிலத்தைக் கடல் தனது அலைகளால் கவ்விக்கொண்டது என்கிறது கலித்தொகை (104). பெரும் நாடுகளையும் காடுகளையும் நதிகளையும் சிறந்த திராவிடர் கலாச்சாரத்தையும் கொண்ட இலெமூரியா, அடுத்தடுத்து நிகழ்ந்த கடல்கோளினால் முற்றிலுமாக மூழ்கிவிட்டது.

தென் கோடி கடற்பகுதியில் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்தால் முற்றிலுமாக மூழ்கிவிட்ட இலெமூரியாவைப் பற்றி பல அரிய செய்திகள் கிடைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆர்.மணவாளன் எழுதிய உலக அதிசயங்கள் அன்றும் இன்றும் என்ற நூலில் இருந்து ...

No comments:

Post a Comment